Saturday, November 1, 2008

கூழாங்கற் சினேகங்கள்

நீர்ச்சலனத்திற்கு ஏதுவான
ஒரு கூழாங்கல்லைப் போல
உருண்டு திரண்டு
பொலிவாகிவிட்டது இதயம்

திரவப்பரப்பினைத் தொட்டகலும்
நாணல்களுக்குத் தெரிந்திருக்கலாம்
அதிலொரு சிறு சிற்பம் வடிக்கும்
நோக்குடன் நீ வருகிறாயென

நீர் மாறி, நிறம் மாறி
சிற்பமாகலாம் இவ்விதயம் - அன்றி
சிதறியும் போய்விடலாம்

உனக்கென்ன
ஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்கு
சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது
மென்னிதயங்கள் மட்டும் தான்...!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

15 comments:

கோகுலன் said...

நல்ல கவிதை..

முழுமை அனுபவம் பெறாத சிற்பியின் கையில் சிற்பமாகாமல் உடைந்து போகும் கற்கள் அதிகம்தான்.. (வாழ்க்கை) கற்கும் படலத்தில் அதை தவிர்க்க முடியாதவையாகின்றன..

என்ன ஒன்று.. உடைந்த இதயங்களை அன்பு மீண்டும் ஒட்டி சிற்பமாக்கலாம் எந்நேரமும்..

//உனக்கென்ன
ஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்கு
சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது
மென்னிதயங்கள் மட்டும் தான்...!//

நல்ல வரிகள்..

Kavinaya said...

கவிதை நன்று. என்ன செய்வது?உருண்டு திரண்டு எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கூழாங்கற்களால் அறிய முடிவதில்லை, தன்னை உருவாக்கும் சிற்பிக்கும் உடைக்கும் சிற்பிக்கும் உள்ள வித்தியாசத்தை.

Anonymous said...

அழகான வரிகள்..

எப்போதும் போலவே..சகோதரனின் பேனா வார்த்தைகளை அழகாகவே வடித்துள்ளது

ராமலக்ஷ்மி said...

//நீர் மாறி, நிறம் மாறி
சிற்பமாகலாம் இவ்விதயம் - அன்றி
சிதறியும் போய்விடலாம்//

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

நளன் said...

//சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது
மென்னிதயங்கள் மட்டும் தான்//

நித‌ர்ச‌ன‌ம் தான்.

தலைப்பே பிடித்துபோய்விட்ட‌து ரிஷான். :)

MSK / Saravana said...

அழகான கவிதை.. மனசுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது..

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

//என்ன ஒன்று.. உடைந்த இதயங்களை அன்பு மீண்டும் ஒட்டி சிற்பமாக்கலாம் எந்நேரமும்..//

ஆமாம். அன்பு மீளவும் ஒட்ட வைக்கலாம். காலமும் ஆற்றா உடைசல்களையும் வெடிப்புக்களையும் என் செய்வது?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//கவிதை நன்று. என்ன செய்வது?உருண்டு திரண்டு எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கூழாங்கற்களால் அறிய முடிவதில்லை, தன்னை உருவாக்கும் சிற்பிக்கும் உடைக்கும் சிற்பிக்கும் உள்ள வித்தியாசத்தை.//

ஆமாம்..ஆனால் கற்களின் வலியை சிற்பிகள் உணர்வதில்லையே :(

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

M.Rishan Shareef said...

அன்பின் தூயா,

//அழகான வரிகள்..

எப்போதும் போலவே..சகோதரனின் பேனா வார்த்தைகளை அழகாகவே வடித்துள்ளது//

நீண்ட நாளைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். எப்படியிருக்கிறீர்கள் சகோதரி?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

வருகைக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் குட்டிச் செல்வன்,

//நித‌ர்ச‌ன‌ம் தான்.

தலைப்பே பிடித்துபோய்விட்ட‌து ரிஷான். :)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

//அழகான கவிதை.. மனசுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது..//

மனதில் உணர்ச்சிகள் வரிகளாகியிருக்கின்றன. ஒவ்வொரு மனதும் உணரக் கூடிய உணர்ச்சிகள். நீங்களும் உணர்ந்ததில் மகிழ்ச்சி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

Sakthy said...

//உனக்கென்ன
ஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்கு
சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது
மென்னிதயங்கள் மட்டும் தான்...//

அழகான கவிதை ...
தெரிந்ததோ ,தெரியாமலோ வீசப்படும் கூழங்கல்லுக்கு தெரியாது இல்லையா உடைந்த இதயத்தின் வலி ...

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//அழகான கவிதை ...
தெரிந்ததோ ,தெரியாமலோ வீசப்படும் கூழங்கல்லுக்கு தெரியாது இல்லையா உடைந்த இதயத்தின் வலி ...//

சரிதான். ஆனால் தெரிந்தே வீசப்படும் கற்களால்தான் வலிக்க வலிக்க இதயங்கள் நொருங்குகின்றன அல்லவா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்னேகிதி :)